பாவேந்தர் பாரதிதாசன்
* பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
* பிறப்பு: 1891 ஏப்ரல் 29 புதுவையில் பிறந்தார்.
* தாய்: இலக்குமி
* தந்தை: கனகசபை
* படைப்புகள்: குடும்ப விளக்கு, இருண்டவீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு
* சிறப்பு பெயர்: , பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
* சிறப்பு: பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.
* தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது.
* ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது
* திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.
சொற்பொருள்:
* தெளிவுறுத்தம் - விளக்கமாகக் காட்டும்
* சுவடி - நூல்
* எளிமை - வறுமை
* உலகியலின் அடங்கலுக்கும் - வாழ்வியல் முழுமைக்கும்
* நாணிடவும் - வெட்கப்படவும்தகத்தகாய - ஒளிமிகுந்த
* சாய்க்காமை - அழிக்காமை
* நூற்கழகங்கள் - நூலகங்கள்
* களைந்தோம் - நீக்கினோம்
* தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
இலக்கணக்குறிப்பு:
* புதிது பதிது, சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்கள்
* செந்தமிழ் - பண்புத்தொகை
* சலசல - இரட்டைக்கிளவி
பிரித்தறிதல்:
* வெளியுலகில் - வெளி + உலகில்
* செந்தமிழ் - செம்மை + தமிழ்
* ஊரறியும் - ஊர் + அறியும்
* எவ்விடம் - எ + இடம்
உரைநடை:
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
* மனக்குகையில் சிறுத்தை எழும். இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு.
* பெண்களின் சமூக விடுதலைக்காக போராடியவர் - பெரியார்.
* பெரியாரின் இரண்டு பெண்விடுதலைச் சிந்தனைகள் 1. அடிப்படைத் தேவைகள் 2. அகற்றப்படவேண்டியவை
* அடிப்படைத் தேவைகள்: பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
* அகற்றப்படவேண்டியவை: குழந்தை திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு
* பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றவர் பெரியார்.
* பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை ஒழிக்கப்பட் வேண்டும் என்றவர் - பெரியார்.
* ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும் என்றவர் - பாரதியார்.
* பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் - பெரியார்
* ஆணுக்குப் பெண் இளைப்பில்லை - என்று சிந்தித்தவர் - பெரியார்
* பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் - பெரியார்.
* சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தவர் - பெரியார்
* சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர் - பெரியார்.
* தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை.
* பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர் பெரியார்
* அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புட்சி ஏற்படும் என்றவர் - பெரியார்
* பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை
* பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்.
இலக்கணம்: சொல்
* ஒரு சொல் தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது - தனிமொழி
* பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.
* பதம் - பகுபதம் (பகுக்கவியலும் பதம்); பகாப்பதம் (பகுக்கவியலாப் பதம்)
* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
* கிளவி - இரட்டைக்கிளவி (இரட்டைச்சொல்)
* எ.கா: பூ, கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள்
* மண், மாந்தர், நடந்தனர் இவை இரண்டு முதலாகப் பல எழுத்துகள் தொடர்ந்த சொற்கள்.
* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.
* ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி.
* இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.
* ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.
* தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்
* வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
* ஓர் எச்ச வினை பெயரைக் கெண்டு முடிந்தால், அது பெரயெச்சம் எனப்படும்.
* முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
* வினையெச்சம் இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூன்று வகைப்படும்.
தொகைச்சொற்களை விரித்தெழுதுக
* இருவினை - நல்வினை, தீவினை, தன்வினை, பிறவினை
* இருதிணை - உயர்திணை, அஃறிணை, அகத்திணை, புறத்திணை
* முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
* முப்பால் - அறம், பொருள், இன்பம்
* மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
* மூவேந்தர் - சேரன், சோழன்,. பாண்டியன்
* நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
* நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
* ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
* ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
* ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்
* ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக:
* Charity begins at home - தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.
* Covet all lose all - பேராசை பெருநட்டம்
* Diamonds cut diamonds - முள்ளை முள்ளால் எடு
* East or west, home is the best - எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது.
* Enpty vessels make the greatest sound - குறை குடம் கூத்தாடும்.
செய்யுள்:
* கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் குகப்படலம்
சொற்பொருள்:
* ஆயகாலை - அந்தநேரத்தில்
* அம்பி - படகு
* நாயகன் - தலைவன்
* நாமம் - பெயர்
* துறை - தோணித்துறை
* தொன்மை - தொன்றுதொட்டு
* கல் - மலை
* திரள் - திரட்சி
* காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
* துடி - பறை
* அல் - இருள்
* சிருங்கிபேரம் - கங்கைக்கரையோர நகரம்
* திரை - அலை
* மருங்கு - பக்கம்
* உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்
* கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
* குறுகி - நெருங்கி
* இறைஞ்சி - வணங்கி
* சேவிக்க - வணங்க
* நாவாய் - படகு
* நெடியவன் - உயர்ந்தவனாகிய இராமன்
* குறுகினன் - வந்துள்ளான்
* நாவாய் - படகு
* இறை - தலைவன்
* பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
* பரிவு - இரக்கம்
* குறிஞ்சி - தலைமுடி
* மேனி - உடல்
* அருத்தியன் - அன்பு உடையவன்
* மாதவர் - முனிவர்
* முறுவல் - பன்னகை
* விளம்பல் - கூறுதல்
* சீர்த்த - சிறந்த
* பவித்திரம் - தூய்மையானது
* இனிதின் - இநிமையானது
* உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது
* தழீஇய - கலந்த
* கார்குலாம் - மேகக்கூட்டம்
* பார்குலாம் - உலகம் முழுதும்
* இன்னல் - துன்பம்
* ஈர்கிலா - எடுக்க இயலாத
* தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
* அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்
* கடிது - விரைவாக
* முடுகின - செலுத்தினன்
* முரிதிரை - மடங்கிவிழும் அலை
* இடர் - துன்பம்
* அமலன் - குற்றமற்றவன்
* நுதல் - நெற்றி
* இளவல் - தம்பி
* உன்னேல் - நினைக்காதே
* கடிது - விரைவாக
* முடுகினன் - செலுத்தினன்
* முரிதிரை - மடங்கிவிழும் அலை
* இடர் - துன்பம்
* நயனம் - கண்கள்
* இந்து - நிலவு
* நுதல் - நெற்றி
* குரிசில் - தலைவன்
* இருத்தி - இருப்பாயாக
இலக்கணக்குறிப்பு:
* போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
* கல்திரள்தோள் - உவமைத்தொகை
* நீர்முகில் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
* திரைக்கங்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
* இருந்தவள்ளல் - பெயரெச்சம்
* வந்துஎய்தினான் - வினையெச்சம்
* கூவா - கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
* குறுகி, சேவிக்க - வினையெச்சங்கள்
* தேவா - விளி
* கழல் - தானியாகுபெயர்
* வந்தனென் - தன்மை ஒருமை வினைமுற்று
* அழைத்தி(அழைப்பாய்) - முன்னிலை ஒருமை வினைமுற்று
* வருக - வியங்கோள் வினைமுற்று
* பணிந்து, வளைந்து, புதைத்து - வினையெச்சங்கள்
* இருத்தி - முன்னிலை ஒருமை வினைமுற்று
* தேனும் மீனும் - எண்ணும்மை
* மாதவர் - உரிச்சொற்றொடர்
* அமைந்த காதல் - பெயரெச்சம்
* சீர்த்த - ஒன்றன்பால் வினைமுற்று
* தழீஇய (தழுவிய) - சொல்லிசை அளபெடை
* கார்குலாம்(காரது குலாம்) - ஆறாம் வேற்றுமைத்தொகை
* உணர்த்துவான் - வினையாலணையும் பெயர்
* பார்த்தகண்ணை - பெயரெச்சம்
* தீர்கிலேன் - செய்குவென் - தன்மை ஒருமை வினைமுற்றுகள்.
* நனிகடிது - உரிச்சொற்றொடர்
* நெடுநாவாய், நெடுநீர் - பண்புத்தொகைகள்
* என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை
* நின்கேள் - நான்காம் வேற்றுமைத்தொகை
* தாமரை நயனம் - உவமைத்தொகை
* தீராக் காதலன் - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
* மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்
* இனிய நண்ப - குறிப்புப் பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
* பிறந்த ஊர்- தேரழுந்தூர் (நாகை மாவட்டம்)
* தந்தை - ஆதித்தன்
* காலம் - இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவன்
* ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
* செய்ந்நன்றி மறவா இயல்பினார்.
* தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
* கம்பரது காலம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு
* இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி, அந்தாதி, திருக்கை வழக்கம்
* சமகாலத்துப் புலவர்கள் - செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி
* யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் புகழ்ந்து பாடியுள்ளார்.
* வடமொழியில் கம்பராமாயணத்தை வால்மீகி முனிவர் எழுதினார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
கம்பராமாயணத்தில் 6 காண்டங்கள் உள்ளன.
* 1. பாலகாண்டம்
* 2. அயோத்தியா காண்டம்
* 3. ஆரண்ய காண்டம்
* 4. கிட்கிந்தா காண்டம்
* 5. சுந்தர காண்டம்
* 6. யுத்த காண்டம்
* தமிழுக்குக் கதி என்ற சிறப்பும் கம்பராமாயணத்திற்கு உண்டு.
* குகப்படலத்தை கங்கைப்படலம் எனவும் கூறுவர்.
* இடர் - துன்பம்
* நாவாய் - படகு
* இறை - தலைவன்
* இந்து - நிலவு
* இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.
* கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.
* அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.
* பாடப்பகுதியான குகப் படலம் ஏழாம் படலமாகும்.
* இப்பகுதியைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.
* கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரி்ய இலக்கணங்களை முழுமையாகப்
பெற்றது.
* பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது.
* கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது.
* சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.
No comments:
Post a Comment